இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், அழைப்பு கடிதத்தை காட்டினால், அரசு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகை வழங்க, போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங், சென்னையில், அண்ணா பல்கலை வளாகத்தில் இன்று துவங்குகிறது.
கவுன்சிலிங் முன்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அருகில் உள்ள மண்டல அலுவலகங்களில் நடந்தது. சில ஆண்டுகளாக சென்னையில் மட்டும் நடப்பதால், வெளியூர் மாணவர்களுக்கு பஸ் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், தங்களின், 'ஆன்லைன்' அழைப்பு கடிதத்தை, அரசு பஸ்சில் காட்டினால், மாணவருக்கும், அவருடன் வரும் ஒருவருக்கும், கட்டணத்தில், 50 சதவீதம் சலுகை வழங்க, போக்குவரத்து மண்டல அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் கடிதம் என்பதால், கவுன்சிலிங்கிற்கு முந்தைய இரண்டு நாட்களுக்கு மட்டுமே, இந்த சலுகை கிடைக்கும்.