ஆகஸ்ட் 21ல் 'டீட்' தேர்வு

அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, ஆகஸ்ட், 21ல், 'டீட்' நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது.அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும்
எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

அண்ணா பல்கலை இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 650 ரூபாய்க்கான டி.டி.யுடன் அனுப்ப வேண்டும். எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,க்கு மட்டும், தொலைநிலை கல்வி தகுதித் தேர்வான, 'டீட்' நுழைவு தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பங்களை ஆக., 10க்குள் அனுப்ப வேண்டும்; ஆக., 21ல் நுழைவுத் தேர்வு நடக்கும்.எம்.எஸ்சி., கம்ப்யூ., சயின்ஸ் படிப்புக்கு, செப்., 3 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என, தொலைநிலைக் கல்விப் பிரிவு அறிவித்துள்ளது.