விமானப் படை பணியில் சேர அழைப்பு: 21-23 தேதிகளில் நேர்முகத் தேர்வு

இந்திய விமானப் படை பணியாளர் தேர்வில் பங்கேற்று பயன்பெற மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து இந்திய விமானப் படைக்கு ஆண் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வரும் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை, எண்.14, ஏர்மென் தேர்வு மையம், வாயுசேனா சாலை, காக்கநாடு, கொச்சின், கேரளம் -682030 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் அனுப்பக்கூடாது. நேரடியாகச் செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்குச் செல்லும்போது அவரவர் நன்றாக வாசிக்கும் ஏதேனும் ஒரு இசைக் கருவியை எடுத்து செல்ல வேண்டும். இதற்கான வயது வரம்பு, தேர்வு நாள், கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை அறிய WWW.AI​R​M​E​N​S​E​L​E​C​T​I​ON.GOV.IN​ என்ற இணையதள முகவரியில் அல்லது 044- 22390561 (நேரடி) 044-22395553 (விரிவு-7833) என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். மேலும் CO.ASC-​TN000GOV.IN​ என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விவரங்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.