பி.இ. கலந்தாய்வு: ஜூன் 20-இல் சமவாய்ப்பு எண் வெளியீடு

பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது.

 
                 நிகழாண்டு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியது. இம்முறை விண்ணப்ப விநியோகம் முழுவதும் இணையவழி (ஆன்-லைன்) பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 1 லட்சத்து 34 ஆயிரத்து 722 பேர் சமர்ப்பித்தனர்.
இவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 20-இல் வெளியிடப்பட உள்ளது. ஜூன் 22-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
24-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வும், 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும். ஜூன் 27-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உளளது.
அழைப்புக் கடிதம்: கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
பல்கலைக்கழக இணையதளத்தில் பெயர், பிறந்தத் தேதி, பொறியியல் சேர்க்கை பதிவு எண் ஆகியவற்றை ஆன்-லைனில் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.