மருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று நன்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மருத்துவக்கல்வி இயக்குநர் விமலா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மருத்துவ படிப்புக்கு இன்று நன்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாளை முதல் ஜூன் 6 வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.
சென்னையில் நான்கு இடங்களில் விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஜூன் 17-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகின்றது.
ஜூன் 20-ல் முதல்கட்ட கலந்தாய்வும், ஜூலை 18-ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்படுகிறது. ரூ.500 செலுத்தி விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ள வேண்டாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் விமலா கூறியுள்ளார்.