மொபைல் போன் பயன்படுத்தபூத் ஏஜென்ட்களுக்கு தடை !

ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டுச்சாவடி உள்ளே, பூத் ஏஜென்ட்கள், மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
             ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டுச்சாவடி உள்ளே, வேட்பாளர்களின் சார்பில், பூத் ஏஜென்ட்கள் இருப்பர்.அவர்கள் ஓட்டுப்போட வரும் வாக்காளர், உண்மையான வாக்காளரா, போலியான வாக்காளரா என சரி பார்ப்பர். தவறில்லாமல் ஓட்டுப்பதிவு நடக்கிறதா என கண்காணிப்பர்.

அவர்கள் ஓட்டுச்சாவடி உள்ளே, மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர், மொபைல் போன் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை, உயர் அதிகரிகளுக்குமொபைல் போன் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

மாலை, 3:00 மணிக்கு மேல், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு விவரத்தை தெரிவிக்க வேண்டும். மாலை, 3:00 மணிக்கு மேல், ஓட்டுப்பதிவு முடியும் வரை பூத் ஏஜென்ட் இருக்க வேண்டும். அவருக்கு மாற்று ஆள் வரமுடியாது. வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்குள், மொபைல் போன் எடுத்துச் செல்லலாம். ஆனால், அதை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.