சென்னை : தமிழகத்தில்
உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் மே மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அண்ணா
பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் மாதம் 4ம் தேதிக்கு
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று, அண்ணா பல்கலைக்கழகம் இந்த கால நீட்டிப்பினை செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் இதுவரை 3000 விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.