ஜூலை இரண்டாம் வாரத்தில் சி.பி.எஸ்.இ. சிறப்பு துணைத் தேர்வு

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறுகின்றன.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தேர்வு நெறியாளர் கே.கே.சௌத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
பள்ளி மாணவர்களின் பட்டியலை பள்ளிகளும், தனித்தேர்வர்களும் தனித்தனியே அனுப்ப வேண்டும். இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்த அறிவிப்பு ஜூன் 10-இல் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷள்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.