தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைப்பு

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு நாளை மே16 நடக்கவிருந்த வாக்குப்பதிவை மே 23 ம் தேதிக்கும் வாக்கு எண்ணிக்கை மே25ம் நடை பெறும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பணப்பட்டுவாட மற்றும் பல்வேறு புகாரையடுத்து தேர்தல் ஆனையம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொகுதியில் நிறைவடைந்த நிலையில் தேர்தலை ஒத்திவைத்துள்ளது.
ஏற்கனவே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத்துள்ளது.