விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் புதன்கிழமை (மே 18) மட்டும் விண்ணப்பிக்கலாம்.

 மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வுகள்: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலைப் பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.