அரசு பள்ளியில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம்:
மலையாண்டிபட்டினத்தைச் சேர்ந்த என்.ஜனனி 498 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவி எஸ்.ஸ்வேதா மற்றும் வேலூர் டிஎம்டி எத்திராஜம்மாள் முதலியார் அரசு மகளிர் பள்ளியில் படிக்கும் மாணவி எப். நேஷா கௌசர் 496 மதிப்பெண்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படிக்கும் எம்.பவதாரினி, புதுக்கோட்டை ராணிஸ் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படிக்கும் எம்.நிஷத் ரஹிமாம், கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் ஆர்.சந்திரசேகர், திருவண்ணாமலை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவி எஸ்.மேகலா, திருவண்ணாமலை அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவி என்.தீபா, விருகம்பாக்கம் ஜெய்கோபல் கரோடியா அரசு மகளிர் பள்ளியில் படிக்கும் மாணவி கேத்ரின் அமலா ராக்கினி ஆகியோர் 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.