பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் மருந்தாளுநர் பணி: 27-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Pharmacist B
தகுதி: +2 முடித்த பிறகு, Pharmacy படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அத்துடன், 3 மாதங்கள் பயிற்சி பெற்று மாநில அல்லது மத்திய பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18-லிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Technician D 
தகுதி: +2 முடித்த பிறகு, டென்டல் டெக்னீசியன் படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18-இலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.100ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்/பழங்குடியினர்/மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://barcrecruit.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://barcrecruit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.