நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 

மொத்தம் 15 அமர்வுகள் கொண்ட இந்த தொடரில் நிதி மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, தொழிற்சாலைகள் மசோதா போன்ற முக்கியமான மசோதாக்களை  நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று தில்லியில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது,.
இந்த கூட்டத்தில்  2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுக்க உள்ளார்.