தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை : தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்,
சேலம் மாவட்ட முதுநிலை ஆட்சியராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட முதுநிலை ஆட்சியராக சத்தியபிரதா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியராக நாகராஜன்  நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் ஆட்சியராக ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டுள்ளார்.