ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை : தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில்,

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுப்புலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அமித்குமார் சிங் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை எஸ்பி ராஜேஸ்வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் ஹதிமானி புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி எஸ்பி லோகநாதன் மாற்றப்பட்டு பண்டி கங்காதர் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் எஸ்பி மகேஸ்வரன் மாற்றப்பட்டு சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பி உமா மாற்றம் செய்யப்பட்டு, நிஷபா பார்த்திபன் புதிய எஸ்பியாக நியமனம் பெற்றுள்ளார்.