எம்.பார்ம்., படிப்பில் சேரமே 8ல் நுழைவு தேர்வு

சென்னை:எம்.பார்ம்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு,
மே, 8ல் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உட்பட்ட, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில்,

எம்.பார்ம்., படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு, இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்; நேரடி விண்ணப்பம் கிடையாது. 'விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில், மே, 1 வரை, பதிவிறக்கம் செய்யலாம்; மே, 2க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நுழைவுத் தேர்வு, மே, 8ல் நடக்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.