FLASH NEWS ; திட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 1-ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவ நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மத்திய அரசு சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது. முதற்கட்ட நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி மே 1-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், மருத்துவ பொதுநுழைத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் மே 3-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது. கர்நாடகம், உத்தரப் பிரதேசம் போன்ற மாவட்டங்கள் வைத்த கோரிக்கைகளும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.