ரயில் டிக்கெட் முன்பதிவில் 50% கூடுதல் ஒதுக்கீடு:

ரயில்களில் மூத்த குடிமக்களுக்களுக்கான முன்பதிவு இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று,

         அவர்களின் முன்பதிவு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி ரயில்வே பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். இது வரும் ஏப்ர.,ல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், ஒரு ரயிலில் மூத்த குடிமக்கள் அதிகபட்சமாக 90 படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் வரை பெற முடியும்.