இந்த தேர்வை 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் எழுதினர்.
இந்நிலையில் விடைத்தாளை திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. தமிழகம்
முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி
நடைபெற்று வருகிறது.
முதல் நாளான ஒன்று தமிழ் மொழிப்பாடத்திற்கான விடைத்தாள்
திருத்தப்படுகின்றன. இந்த பணி வரும் ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைகிறது.
ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்படுவது
வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மார்ச் மாதமே விடைத்தாள்
திருத்தப்படுகின்றன.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை
தொடங்குகிறது. இதில் 12,53 பள்ளிகளை சேர்ந்த 10,72,185 பேர் மாணவ, மாணவிகள்
எழுதுகின்றனர். இதற்காக 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் சுமார் 50000 பேர் தேர்வு எழுதுகின்றனர்.