எஸ்.எஸ்.எல்.சி.விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஏப்ரல் 25–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 13–ந்தேதி வரை நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஏப்ரல் 25–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் தவறாக மதிப்பீடு செய்வதால்தான் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வித்தியாசம் வருகிறது. இந்த வருடமாவது சரியாக மதிப்பீடு செய்யுங்கள் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே வாய்மொழியாக கூறினார்கள்.இதைத்தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரிகள் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.