தமிழகம்
உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 31ஆம் தேதிக்குள் சட்டப்பேரவைத்
தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம்
ஜைதி கூறியுள்ளார்.தமிழக சட்டப் பேரவையின் தற்போதைய காலம் மே மாதம் 22 ஆம்
தேதி முடிவடைகிறது.
பின்னர்
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: -
வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் அளிப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சியினரின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் முறையாக தேர்தல் பறக்கும் படையினர் ஜி.பி.எஸ்.
வசதியுடன் ஒருங்ணைக்கப்பட உள்ளனர்.புதுவையில் அனைத்து வாக்குப்பதிவு
மையங்களும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வாக்காளர் பட்டியலில்
குளறுபடிகள் உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இதேபோல
புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும்
சட்டப்பேரவையின் காலம் முடிவடைவதால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது
இதனை முன்னிட்டு புதுச்சேரியில் நஜீம் ஜைதி ஆலோசனை மேற்கொண்டார்.