பிரபல சமூக வலைத்தளமான
'வாட்ஸ் ஆப்'-ஐ உலகம்
முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
தனது நண்பர்களுடன்
தொடர்பில்
இருப்பதற்கு
பெரும்பாலும் இதை சார்ந்தே பலரும் இருக்கிறார்கள்.
தற்போது வரை வாட்ஸ்
ஆப்-க்கு
ஓராண்டுக்கு பிறகு பயன்படுத்த ஆண்டு ஒன்றுக்கு
1 டாலர் சந்தா
கட்டணமாக வசூலிக்கப்பட்டு
வருகிறது. இந்நிலையில்,
இனி இந்த
கட்டணம் வசூலிக்கப்பட
மாட்டாது என
வாட்ஸ் ஆப்
தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் வாட்ஸ்
ஆப்பின் அனைத்து
பதிப்புகளுக்கு கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு
19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் ஆப்-ஐ பேஸ்புக் நிறுவனம்
விலைக்கு வாங்கியது
குறிப்பிடத்தக்கது.