பொதுத்தேர்வு எழுதும் மாற்றுதிறனாளிகளின் கோரிக்கை

சேலம்: தமிழகத்தில்அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவமாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளதேர்வுகால விதிமுறை மற்றும் வழிமுறைகளைபள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் எனவலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன்,அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: 
நடப்பு கல்வியாண்டில்பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் தேர்வு எழுதும்மாற்றுத்திறனாளி மாணவமாணவிகளுக்குஅரசு வகுத்துள்ள விதிமுறைகளை தெளிவுப்படுத்த வேண்டும். குறிப்பாகஅவர்களதுபெற்றோரை அலைக்கழிப்பு செய்யக்கூடாது. பார்வை இழப்புநரம்பியல் பாதிப்புகை செயல்பாடின்மைமூளை முடக்குவாதம் மற்றும் மிதமான மனவளர்ச்சி பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி மாணவமாணவியர் தேர்வு எழுத,எழுத்தர்களை அமர்த்திகொள்ளவும்தேர்வு எழுதகூடுதலாக ஒரு மணி நேரம்எடுத்து கொள்ளவும் அரசு உத்தரவு உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவமாணவியர்அவர்களாகவேகல்வித்துறை அலுவலகத்துக்கு சென்றுஇத்தகைய விதிமுறைகளை தெரிந்துபின்பற்றவலியுறுத்த வேண்டி உள்ளது. 
இந்த குறைபாடுகளை களையபள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில்,பொதுத்தேர்வுக்கு முன்பாகமாணவமாணவியருக்கு தேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.