தேர்வு அமைப்புகளுக்கு திடீர் கட்டுப்பாடு

புதுடில்லி: 'பல்கலைக்கழகங்கள், தேர்வு அமைப்புகள், திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்
கூடாது' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டில்லி பல்கலை., திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பாடப்பிரிவுக்கு, 750 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதை எதிர்த்து, ஒரு மாணவர், மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். புகாரை விசாரித்த தகவல் ஆணையம், 'திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பக்கத்துக்கு இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.