30 ஆயிரம் ஆசிரியர் தவிப்பு

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறையில் நியமிக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் முதல் இரண்டாண்டு பணியை, பயிற்சியாக கணக்கிட வேண்டும்.

அந்த பயிற்சிக்கான சான்றிதழை வழங்கி, பணிமூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.இந்நிலையில், 2012ல் நியமிக்கப்பட்ட, 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள்; 2011ல் நியமனம் செய்யப்பட்ட, 5,000 ஆசிரியர்கள் உள்ளிட்ட, 30 ஆயிரம் பேர், பயிற்சிக் காலம் முடிந்தும், சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கின்றனர்.