TNPSC VAO | வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் தனது 12.11.2015 நாளிட்ட அறிவிக்கை எண்:19/2015
மூலம் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்திற்கு தேர்வாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று அதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாளாக 14.12.2015 என்று அறிவித்திருந்தது. ஆனால், பெருமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக, இத் தேர்வுக்கென விண்ணப்பிக்கும் இறுதி நாள் வரும் 31.12.2015 வரையும், விண்ணப்பக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள், வரும் 02.01.2016 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.