சுங்க கட்டண சலுகை நீட்டிப்பு

சென்னை:'வாகனங்களுக்கான சுங்க கட்டண சலுகையை நீட்டிக்க வேண்டும்' என, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.அதைத் தொடர்ந்து, 'மேலும் ஒரு வார காலத்துக்கு, தமிழகத்தில், வாகனங்களுக்கு சுங்கக்
கட்டணம் வசூல் கிடையாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதும், வீடு, உடைமைகளை இழந்த மக்கள், சொந்த ஊர் தேடி புறப்பட்டனர். அவர்களுக்கு, வாகன சுங்கக் கட்டணம் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக, 11ம் தேதி வரை, பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, சுங்க வசூலில் இருந்து, விலக்கு அளித்தோம்.அதை, மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க வேண்டும் என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தன.நிவாரணப் பொருட்கள் இன்னமும், வாகனங்களில் செல்கின்றன; பாதிக்கப்பட்ட மக்கள் இப்பவும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்; பலர், நிலைமை சீராவதைத் தொடர்ந்து, சென்னைக்கு திரும்புகின்றனர்.
அதனால், அவர்களுக்கு உதவிடும் வகையில், மத்திய அரசு, மேலும் ஒரு வார காலத்துக்கு, வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை ரத்து செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.