TNPSC DEPARTMENTAL EXAM PREPONED:மீலாது நபி: துறைத் தேர்வுகள் நாளை நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
மீலாது நபி பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை
நடைபெறவிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் புதன்கிழமை (டிச. 23)
நடக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
மீலாது
நபியையொட்டி, வியாழக்கிழமை காலை-மாலை என இரு வேளைகளிலும் நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டிருந்த துறைத் தேர்வுகள், ஒரு நாளைக்கு முன்பாக புதன்கிழமையே
(டிச. 23) நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 24-ம்
தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத்
தேர்வு, டிசம்பர் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், அரசு
ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ம்
தேதி வரை நடைபெறுகிறது.