பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது - இயக்குநர்

பள்ளிக்கல்வி - சுகாதார முன்னெச்சரிக்கைகள் - பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்!!

             சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அருகே பேல்பூரி உள்ளிட்ட சுகாதாரமற்ற கடைகளை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த கடைகள் இருந்தால், தலைமை ஆசிரியர் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த கடைகளை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.