"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்': புத்தாண்டில் இடைவிடாத புத்தக விற்பனை

புத்தாண்டு விழாவை முன்னிட்டு வியாழன் (டிச.31), வெள்ளி (ஜன.1) ஆகிய இரண்டு நாள்கள் 10 சதவீத தள்ளுபடியுடன் இடைவிடாது புத்தகங்களை விற்பனை செய்ய "நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 புத்தாண்டு தினம் கொண்டாட்ட நிகழ்வாக இல்லாமல், அறிவுசார்ந்த நிகழ்வாக அமையும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து "நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' விற்பனை நிலையங்களிலும் இவ்வாறு இடைவிடாது புத்தக விற்பனை நடைபெறும் என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.