டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி மெக்ஸிக்கோவில் கண்டுபிடிப்பு

உலகிலேயே முதன்முதலாக டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி மெக்ஸிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Aedes aegypti மற்றும் Aedes albopictus எனும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால்,ஆரம்பத்தில் சளி மற்றும் இருமலுடன் என சாதாரண அறிகுறிகளுடன் ஆரம்பித்து பின்னர்
உயிரையே பறிக்கும் மிக கடுமையான நோயாககருதப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த டெங்கு நோய்க்கு ‘ஸனோஃபி’என்ற பிரான்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் டெங்கு நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு, ‘டெங்வாக்ஸியா’ எனப்படும் தடுப்பூசியை வெற்றிகரமாக தயாரித்து மெக்ஸிகோ நாட்டின் ஒப்புதலையும் தற்போது பெற்றுள்ளது.