மாற்று சான்று சிறப்பு முகாம்

சென்னை,:'மருத்துவ மாணவர்களுக்கு, மாற்றுச்சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம், டிச., 14ல் துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்ட மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லுாரிகள், மருத்துவம் சார் கல்லுாரி, பள்ளிகளில், 14ம் தேதி துவங்குகிறது.'முகாம், இரு வாரங்கள் நடக்கும்; விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புகைப்படத்தை ஒட்டித்தர வேண்டும். புகைப்படம், அவர்கள் தரும் விவரங்களை வைத்து, மாற்றுச்சான்றிதழ் தரப்படும். விண்ணப்பத்தை, www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதா லட்சுமி தெரிவித்து உள்ளார்.