மழை, வெள்ளப் பாதிப்புக்குப்
பிறகு சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள்
வரும் திங்கள்கிழமை
(டிச.14) திறக்கப்பட
உள்ளன.இதையடுத்து,
இந்த மாவட்டங்களில்
பள்ளிகளை
நடத்தப்படும்
நிலையில் வைப்பதற்கான
ஆயத்தப் பணிகளையும்,
தூய்மைப் பணிகளையும்
மேற்கொள்ள வேண்டும்
என பள்ளிக்
கல்வி இயக்குநர்
எஸ்.கண்ணப்பன்
உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக
மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களுக்கு
அவர் வியாழக்கிழமை
அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-
பலத்த மழை காரணமாக
சென்னை, திருவள்ளுர்,
காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு
வழங்கப்பட்ட விடுமுறை முடிந்து டிசம்பர் 14-ஆம்
தேதி மீண்டும்
பள்ளிகள் திறக்கப்பட
உள்ளன.அனைத்துப்
பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்
ஒருங்கிணைந்து வகுப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றை
தூய்மைப்படுத்தும் பணி, பிற
பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.உள்ளாட்சி
அமைப்புகளுடன் இணைந்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கழிவறைகளை
பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்துவதோடு, கொசுமருந்து புகையும் அடிக்கப்பட வேண்டும்.அனைத்து சத்துணவு
மையங்களும் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் செயல்படும்
நிலையில் உள்ளதை
உறுதிப்படுத்த வேண்டும்.
அந்த மையங்களில் சமையல்
பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும்.
சமையலுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட பொருள்களும்,
குடிநீரும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிநீரில்
குளோரின் மாத்திரைகளைக்
கலக்க வேண்டும்.பள்ளிகள் டிசம்பர்
14-ஆம் தேதியன்று
நடத்தப்படும் நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும்
வகையில் அனைத்துத்
தலைமையாசிரியர்களிடமும் உறுதிமொழி கடிதத்தைப்
பெற்று பள்ளிக்
கல்வி இயக்ககத்துக்கு
டிசம்பர் 13-ஆம் தேதி அனுப்ப வேண்டும்
என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.