முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.100 கோடியை தாண்டியது

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 111 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 745 ரூபாயாகும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜெயலலிதாவிடம் இன்று (15.12.2015) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.
1. மக்கள் குரல் மற்றும் Trinity Mirror நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்  ஆர். முத்து குமார், மக்கள் குரல் நாளிதழின் சார்பில் 3 லட்சம் ரூபாய் மற்றும் Trinity Mirror நாளிதழின் சார்பில் 3 லட்சம் ரூபாய், என மொத்தம் 6 லட்சம் ரூபாய்.
2. NAC ஜுவல்லர்ஸ் மேலாண்மை இயக்குநர் அனந்தபத்மநாபன் 25 லட்சம் ரூபாய்.
3. கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண்மை இயக்குநர் கே. வெங்கட்ராமன், கரூர் வைஸ்யா வங்கியின் சார்பில் 2 கோடி ரூபாய் மற்றும் வங்கி பணியாளர்களின் ஒருநாள் சம்பளமான 1 கோடி ரூபாய், என மொத்தம் 3 கோடி ரூபாய்.
4. செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா (அய்யப்பன்) அவர்கள் 3 கோடி ரூபாய்.
5. கோயம்புத்தூர், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்  சஞ்சய் ஜெயவர்த்தனவேலு 2 கோடி ரூபாய்.
6. சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சி. துரைசாமி மற்றும் இயக்குநர் டி. சாந்தி ஆகியோர் 1 கோடி ரூபாய்.
7. GRT ஜுவல்லர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஜி.ஆர். அனந்தபத்மநாபன் (ஆனந்த்) மற்றும் ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் 1 கோடி ரூபாய்.
8. நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நிசான் இந்தியா ஆபரேஷன்ஸ் தலைவர் கியோம் சிகார் 1 கோடி ரூபாய்.
9. கோயம்புத்தூர், பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு & சன்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் அவர்கள் 1 கோடி ரூபாய்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 12 கோடியே 31 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (15.12.2015) முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 111 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 745 ரூபாயாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது