பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - DINAMALAR

சென்னை:கன மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள

காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறுகிறது. இன்று இரவு, சென்னை அருகே கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி,
கல்லுாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.அதுபோல, கடலுார்
உட்பட, பல மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.