'டெங்கு' பரவுவதை தடுக்க புதிய திட்டம்

'டெங்கு' காய்ச்சல் பரவுவதை தடுக்க, 300 குடும்பங்களுக்கு, ஒரு சுகாதாரப் பணியாளரை நியமிக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவு விவரம்:* சுகாதார பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று,
தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்* ஒவ்வொரு வீட்டுக் கும் ஆறு நாட்களுக்கு ஒரு முறை, சுகாதார பணியாளர் செல்லும் வகையில், செயல் திட்டம் வகுக்க வேண்டும்* மக்களுக்கு நில வேம்பு கஷாயம் வழங்கு வதுடன் நோய் குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.