அடுத்த தலைமை நீதிபதியாகடி.எஸ்.தாக்குர் பதவியேற்கிறார்

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி, எச்.எல்.தத்துவின் பதவிக் காலம், அடுத்த மாதம், 2ம் தேதியுடன்
முடிகிறது.இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி பதவிக்கு, தற்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி, டி.எஸ்.தாக்குரின் பெயரை, தத்து பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, பிரதமர் அலுவலகத்துக்கு இந்த பரிந்துரை அனுப்பி வைக்கப்பட உள்ளது; பின், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதைத்தொடர்ந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.