25 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை - DINAMALAR

சென்னை : தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


திருச்சி, நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர், சென்னை, திருவள்ளூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(16-11-15) பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, பெரம்பலூர், கரூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர் துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.