ராமநாதபுரத்தில் ஜன. 20ல் தேசிய மாணவர் கேரம் போட்டி

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ஜன., 20ல் தேசிய மாணவர் கேரம் போட்டி நடக்கிறது.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், மாணவர்களுக்கு தடகளம், ஒற்றையர், இரட்டையர் தனித்திறன், குழு விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடத்தப்படுகிறது.


61வது தேசிய போட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது நடந்து வருகின்றன. ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேசிய மாணவர் கேரம் போட்டி 2016 ஜன., 20ல் நடக்கவுள்ளது. ஜன., 24ல் முடிவடையும் இப்போட்டியில் கேந்திரியா வித்யாலயா, சர்வோதயா பள்ளிகள், இந்தியாவில் இருந்து 15 மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி அணிகள் பங்கேற்க உள்ளன.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ள இப்போட்டியில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர் என, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத் கூறினார்.