12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - DINAMALAR

சென்னை:கனமழை தொடர்வதால், சென்னை உட்பட, 12 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.'கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், இன்னும் இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலுார், கடலுார், திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, பெரம்பலுார் என, ஒன்பது மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், அரியலுார், துாத்துக்குடி மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.