சித்தா, ஆயுர்வேதம் இன்று கலந்தாய்வு

சென்னை, :சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகள் மற்றும், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம்
உள்ளிட்ட, ஐந்து விதமான இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, 1,300 இடங்கள் உள்ளன. இதற்கு, 5,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவற்றில் சேர்வதற்கான கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அண்ணா சித்த மருத்துவமனை வளாகத்தில், இன்று துவங்குகிறது. முதல் நாள் கலந்தாய்வுக்கு, 950 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்; 28ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.