சரஸ்வதி பூஜை, ஆயுத
பூஜையை முன்னிட்டு
பாரத ஸ்டேட்
வங்கி,இந்தியன்
வங்கி உள்பட
அனைத்து வங்கிகளுக்கும்
புதன்கிழமை
(அக்.21), வியாழக்கிழமை (அக்.22) ஆகிய
இரண்டு நாள்கள்
மட்டுமே விடுமுறை
என வங்கிகளின்
உயர் அதிகாரிகள்
தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை
(அக். 23) அனைத்து
அரசு அலுவலகங்களும்
செயல்படும். அரசு தலைமை ஹாஜியின் தகவலைத்
தொடர்ந்து மொஹரம்
தினத்தின் விடுமுறையை
வெள்ளிக்கிழமையிலிருந்து (அக்.23) சனிக்கிழமைக்கு
(அக்.24) மாற்றி
தமிழக அரசு
திங்கள்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து வங்கிகள் அனைத்தும்
வரும் வெள்ளிக்கிழமை
(அக்.23) செயல்படும்
என உயர்
அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் சனிக்கிழமை (அக்.24)
4-ஆவது சனிக்கிழமை
என்பதால், அன்றைய
தினம் வங்கிகள்
அனைத்துக்கும் விடுமுறை நாளாகும்