பி.எஸ்.என்.எல்., பண்டிகை சலுகை

சென்னை:தசரா பண்டிகையை முன்னிட்டு, மொபைல் போன்களுக்கு கூடுதல் சலுகையை பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:தசரா பண்டிகையை முன்னிட்டு, 890 ரூபாய்க்கு, 'டாப் அப்' செய்தால், 1,000 ரூபாய்க்கு பேசலாம். இந்த சலுகை, வரும்,
19லிருந்து 21ம் தேதி வரை அமலில் இருக்கும். கூடுதல் விவரங்களுக்கு, www.chennai.bsnl.com இணையத்தை பார்க்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.