'ஆன்-லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்

ரயில் டிக்கெட்டை, 'ஆன்-லைன்' மூலமாக முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, நாளை முதல்
செயல்பாட்டிற்கு வருகிறது.அதிகாலை, 12:30 மணி முதல் இரவு, 11:30 மணி வரை, ரயில் டிக்கெட்டை இணையதளம் வாயிலாக, முன்பதிவு செய்யும் வசதி, 2010, ஏப்ரல் முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்யும் நேரத்தை மேலும், 15 நிமிடங்கள் அதிகரித்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, அதிகாலை, 12:30 மணி முதல் இரவு, 11:45 மணி வரை இனி முன்பதிவு செய்ய முடியும். இதே நேரத்தில், ரயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்ய இயலும். இந்த மாற்றம் நாளை முதல் உடனடியாக செயல்பாட்டிற்கு வருகிறது. அனைத்து மண்டலங்களுக்கும்
இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.