அண்ணா பல்கலை கிரிக்கெட் 30 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்பு: ராமநாதபுரத்தில் நாளை துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நாளை துவங்கும் அண்ணா பல்கலை., மண்டல கிரிக்கெட் போட்டியில் 30 பொறியியல் கல்லுாரி அணிகள் பங்கேற்கின்றன.

அண்ணா பல்கலை., ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி சார்பில் 16வது மண்டல கிரிக்கெட் போட்டிகள் ராமநாதபுரத்தில் நாளை காலை துவங்குகின்றன. மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 30 பொறியியல் கல்லுாரிகள் பங்கேற்க உள்ளன. சீதக்காதி, சேதுபதி விளையாட்டு மைதானம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லுாரி ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கிறது. அக்., 1ல் நடக்க உள்ள இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்படும் என மண்டல ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தெரிவித்தார்.