குழந்தை மருத்துவ அதிகாரி பதவிக்கான எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை, கோவையில் 20–ந்தேதி நடக்கிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) ‘மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவ அதிகாரி’ பதவிக்கான எழுத்துத்தேர்வு வருகிற 20–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 3 தேர்வு மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை www.tnpsc.gov.in எனும் தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்துகொள்ளலாம். நுழைவுச்சீட்டு கிடைக்காத விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா? என்பதை நிராகரிப்பு பட்டியலில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.