CTET: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான - 'சிடெட்' விண்ணப்பங்களில், திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு - 'டெட்' எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி
வாரியம் - சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் பிற மாநில பள்ளிகளில் பணியாற்ற, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான,'சிடெட்' தேர்வு, செப்டம்பர் 20ம் தேதி, நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், அதில் உள்ள தவறுகளை திருத்தம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு, http://ctet.nic.in/ இணைய தளத்தில், பதிவு எண்ணை பதிந்தால், விண்ணப்பத்தை பார்க்க லாம். அதில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். இன்று முதல் வரும், 25ம் தேதி வரை, இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும்.