மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பொன் மொழிகள்

மக்களின்  ஜனாதிபதி  அப்துல் கலாம் அவர்களின் பொன் மொழிகள்
1.   வெற்றி  குறித்த நமது  பார்வை திண்ணமாய் இருந்தால்  தோல்வி நம்மை பாதிக்கவே பாதிக்காது
2.   வித்தியாசமாய் யோசிக்க பழகுங்கள் . யாரும் பயனிக்காத பாதையில் பயனிக்க தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் . பிரச்சனைகளை வெற்றிக்கொள்ளுங்கள் .
3.   சிரமங்கள் உங்கள்  வாழ்வை அழிக்க வருவதில்லை உங்கள் சக்தியை பரிசோதிக்கவே   வருகின்றன. அந்த சிரமங்கள்  உங்களை நெருங்க சிரமப்படுமளவிற்கு  உழையுங்கள் . 
4.   நம் குழைந்தைகளின்  வளமான வருங்காலத்திற்காக  நம்முடைய நிகழ்காலத்தை  தியாகம் செய்வோம்
5.   கனவு என்பது  நாம் தூங்கும்போது காண்பதல்ல , நம்மை தூங்கவிடாமல்  செய்வது .
6.   துவண்டு விடாதீர்கள் , முயன்று கொண்டே இருங்கள் . தோள்வியிடம்  உங்களை நீங்களே விட்டுக்கொடுக்காதீர்கள் .
7.   ஒரு சிறந்த புத்தகம்  நூறு நல்ல நண்பர்களுக்கு ச் சமம் .  ஆனால் ஒரு சிறந்த நண்பன்  ஒரு நூலகத்திற்குச் சமம் .
8.   வெற்றி பெற்றவர்களின்  கதைகள் உங்களுக்கு தகவல்களை மட்டுமே அளிக்கமு. தோள்வியடைந்தவர்களின் கதைகள்தான்  வெற்றி பெறுவதற்கான  வழிகளை கற்றுக்கொடுக்கும் .
9.   நீ கடைசியாக செய்த தவறு தான் இப்போது  உன்னுடைய முதன்மையான ஆசான் .
10. சவாலை  சாதிக்கும்  வாய்ப்பாக மாற்றுபவன்  செல்வந்தன் ஆகிறான் . சிறந்த தலைவனாகவும்ஆகிறான் .
                          படித்ததில் பிடித்தது
FAIL  ,  END  ,  NO    போன்ற  நெகடிவ் வார்த்தைகளுக்கும்  பாசிடிவ் விளக்கத்தை  தந்த  தன்னம்பிக்கை நாயகன்   மக்களின் ஜனாதிபதி  அப்துல் கலாம் .
FAIL  - FIRST  ATTEMPT  IN LEARNING 
                         (கற்றுக்கொள்வதற்கான முதல் வாய்ப்பு )
END   -  EFFORT   NEVER DIES ( முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை)
NO      -  NEXT OPPORTUNITY  (அடுத்த  வாய்ப்பு )
தொகுப்பு  :  சி. சுகுமார் , தலைமையாசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி ,    
               ஆதனூர் – 632317 ,  தி .மலை மாவட்டம் .