உஷார்: 'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்?

2. பதியப்பட்ட பதிவு / கருத்துக்களைப் பொறுத்து, அது இந்திய தண்டனைச் சட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பச் சட்டத்துக்கு உட்பட்டதா என்று முடிவு செய்யப்படும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்ற குழுக்களில் இருந்தோ, மற்றொருவரிடம் இருந்தோ நமக்குப் பகிரப்பட்டால் என்ன செய்வது?
விக்கி: மற்றவர்கள் மூலம் ஒரு தகவலைப் பெறுவது குற்றமாகாது. ஆனால் ஒருவர், தகவலின் உண்மைத்தன்மையை அறியாமல், அதனை மற்றவர்களுக்கு அனுப்பினாலோ, காண்பித்தாலோ அது குற்றமாகும். தவறான செய்தியைப் பகிர்வதன் மூலம் சம்பந்தப்பட்டவருக்குத் தவறிழைத்தாலோ, இழப்பை ஏற்படுத்தினாலோ, அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.
"குறிப்பிட்ட செய்தி, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை" என்று கூறினால் என்ன நடக்கும்?
விஜய்: அது மேலும் கெடுதலையே விளைவிக்கும். ஒரு மதுக்கடை நிர்வாகி போலியான மதுபானத்தைத் தன் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து, அதனால் யாராவது இறந்து போனால், நிர்வாகியே இறப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். வெறுமனே மது உற்பத்தியாளர் மீது குற்றம் சுமத்த முடியாது. அதுபோலத்தான் இங்கேயும்.
விக்கி: சட்டத்தின் முன்னால் ஒருவர், 'அறியாமையால் இதைச் செய்தேன்' என்று சொல்ல முடியாது. 'எனக்கு வந்ததை அப்படியே பகிர்ந்தேன்' என்றும் கூறமுடியாது. முடிவில் விசாரணை செய்யும் அதிகாரியே யாரைக் கைது செய்யவேண்டும் என்று முடிவு செய்வார்.
காவல்துறையால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
விக்கி: கிடைத்திருக்கும் தகவலை வைத்துக்கொண்டு, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள். புகார் கொடுப்பவர்களோ அல்லது தவறான தகவலால் பாதிக்கப்பட்டவர்களோ முதல் சாட்சியாகக் கருதப்படுவார்கள். வாட்ஸ் அப் தகவலின் உள்ளடக்கத்தின் தன்மையைப் பொறுத்து, மற்றவர்களும் புகார் கொடுக்க முடியும்.
விக்கி: வாட்ஸ் அப் குழு நிர்வாகி, இந்தியர் அல்லாதவராக இருக்கும்பட்சத்தில் கூட, அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.