ஓணம் பண்டிகைக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்
அறிக்கை:
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில், மாவட்டத்தில் உள்ள கருவூலம்
மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை
கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு,
கலெக்டர் கூறியுள்ளார். இதே போல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும்
ஓணம் பண்டிகைக்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.